தமிழுடன் ஒரு சந்திப்பு.
அறிவும்,உணர்வும் ஊட்டும் போதி மரம், மொழி,சமயம்,சமூகநீதி பேரறிவுத் தத்துவம், திராவிட சித்தாந்தத்தின் மாபெரும் சொத்து, முனைவர்/பேராசிரியர் 'தோழர்.கரச'வுடன் (எனக்கு டார்லிங்) நேற்று மாலை ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ந்தது. இணையத்தின் தோழர்களை நேரில் சந்திக்கிற நிகழ்வுகள் என்பது சுவாரஸ்யமானதுதான் ஆனால் அது ஒரு சம/சக சிந்தனையாளர்கள் சந்திப்பாகவே முடிந்து கொள்ளும். அதேவேளை, அந்தச்சந்திப்பு, முருகர் மாதிரியான ஆளுமைகள் என்றால் அது கடலை முதன்முதலாக காணச் செல்லும் ஒரு சிறுவனின் மனநிலைக்கு ஒப்பானது. கொரானா பேரிடர் காரணமாக அவரது கோவை வருகையில் சொற்பமான நபர்களை மட்டுமே சந்திப்பதாக அவர் முடிவு செய்திருந்தார். தவிர, அவர் திருவனந்தபுர பல்கலைகழகத்தில் சொற்பொழிவுக்கு தயாராகவும் வேண்டியிருந்த காரணத்தால் அவர் இந்த சந்திப்பை இந்த சொற்ப நபர்களுடன் முடித்துக்கொள்ளும் ஒரு சூழல் சிக்கலில் மாட்டியிருந்தார். (பேரிடர் முடிந்தபின் பிற்பாடு இன்னும் அதிகமான மக்களுடன் சந்திக்கும் திட்டங்கள் அவரிடம் உள்ளது. எனைப்போலவே டார்லிங்கை சந்திக்க விரும்பும் நபர்கள் விசனப்பட வேண்டாம்) அறிவுக்கடலை சந்திக்கின்ற வே